ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
மாநில உரிமைகளைப் பறிக்கிறது. கூட்டாட்சியின் அடித்தளத்திலும் அரிப்பை ஏற்படுத்துகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்த தீர்ப்பு ஒரு சாராருக்கு சார்பாக நீதித்துறை வழுவிவிட்டது என்பது மட்டுமல்ல; கூட் டாட்சி, ஜனநாயக விதிமுறைகள் மற்றும் சட்ட செயல் முறைகளின் புனிதத்தன்மை பற்றி இதுவரை அறி யப்பட்ட நீதிமன்றத்தின் நிலைப்பாடுகளிலிருந்து பின் வாங்குவதாக அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2019இல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதன்மூலம் மற்ற மாநிலங்களைப் போல சிறப்பு அந்தஸ்து ஏதுமற்ற தாக மாற்றிய முரட்டுத்தனமான நடவடிக்கைக்கு, நீதி மன்றம் ஒப்புதல் அளித்தது, சந்தேகத்திற்கு இடமின்றி ஆளும் பாஜகவுக்கு அரசியல் ஊக்கத்தை அளித்துள் ளது. கூட்டாட்சிக் கொள்கையை தகர்ப்பதை சட்டப்பூர்வமாக்கும் இத்தீர்ப்பும், வரலாற்றுச் சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியதும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்ப தாக உள்ளது.
ஒரு மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும் போது நாடாளுமன்றம் எந்தச் செயலை யும்- சட்டமியற்றுவதையும், மாற்ற முடியாத விளைவுக ளைக் கொண்ட எந்தச் செயலையும்- செய்ய முடியும் என்று கூறியிருப்பது கூட்டாட்சிக் கொள்கை மீதான மிகமிகக் கடுமையான தாக்குதலாகும். நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள இந்த ஆபத்தான நியாயப்படுத்தல் அரசியல் அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வதாகும். மாநிலங்களின் உரிமைகள் மீது கடும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசாங்கம் இல்லாத நிலையில் பல விநோத மான - சரி செய்ய முடியாத செயல்களையும் அது அனுமதிக்கிறது. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அரசாங்கத்தின் நிலைபாட்டை ஆமோதித்து மனுதாரர்களின் வாதங்களை நிராகரித்துள்ளது; இதனால் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் ஆர வாரத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர். ஏனென்றால் அந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு பிரதிநிதியையும் ஈடுபடுத்தாமல், அதற்கான வாய்ப்பே தராமல், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு ஏற்றவாறு குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணித்து ஒன்றிய அரசு மோசமான முறையில் செயல்பட்ட பின்ன ணியில் தற்போதைய தீர்ப்பு வெளிவந்துள்ளது.
நீண்ட கால ‘லட்சியம்’
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பது ஆளும் பாஜகவின் நீண்ட கால லட்சியம். இதனை நிறைவேற்ற அது ஒரு சிக்க லான செயல்முறையை மேற்கொண்டது. இரண்டு யூனி யன் பிரதேசமாக பிரித்து அம்மாநிலம் தரமிறக்கப் பட்டது. 5.8.2019 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசியலமை ப்புச் சட்ட ஆணைஒன்றின் மூலம் இதைச்செய்தது.
ஆகஸ்ட் 5 அன்று பிறப்பிக்கப்பட்ட அந்த ஆணை யில், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல மைப்புச் சட்டத்தையே முழுமையாக மாற்றும் விதத் தில் சில வரையறைகளை வகுத்திருந்தது; அதன்படி மாநில சட்டமன்றமே, மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான பரிந்துரையைச் செய்யலாம் என்று மாற்றியிருந்தது. இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் பிரிவு 370(3) இன் படி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் அதிகாரம் அரசியல் நிர்ணய சபைக்குத் தான் உண்டு. ஆனால் தற்போது அரசியல் நிர்ணய சபை என ஒன்று இல்லை. எனவே அரசியல் நிர்ணய சபைக்கான அதிகாரத்தை மாநில சட்டமன்றமே நிறை வேற்றலாம் என ஆகஸ்ட் 5 ஆணையில் ஒன்றிய அரசு மாற்றம் செய்தது. எனினும் ஒன்றிய அரசின் ஆகஸ்ட் 5 ஆணையின் பகுதிகள் அரசியல் சட்ட விரோதமா னவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது; அரசியல் சட்டப் பிரிவு 370இல் திருத்தம் செய்வது அந்த பிரிவின் விதிகளின்படியே அனுமதிக்க முடியாதது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே வேளையில் ஒரு விநோதமான திருப்பமாக 2019 ஆகஸ்ட் 6 அன்று ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிக்கை யில், அரசியல் சட்டப் பிரிவு 370 செல்லத்தக்கது என்றும்; அதே நேரத்தில் எந்தவிதமான பரிந்துரையும் இல்லாமல் இதை செல்லத்தக்கதாக இல்லாமல் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எந்தவித மான பரிந்துரையும் இல்லாமல் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் நீக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
1957இல் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட பிறகு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஜம்மு- காஷ்மீர் மாநி லத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றும்; சிறப்பு அந்தஸ்து நீக்கமானது அத்தகைய ஒருங்கிணைந்த செயல்முறைகளின் உச்சக்கட்டமே தவிர வேறோன்றுமில்லை என்றும் நீதிமன்றம் நியாயப் படுத்தியுள்ளது. இந்த வாதத்தை ஏற்றுக் கொள்வதா கவே வைத்துக் கொண்டாலும் அரசியல் நிர்ணய சபை இன்று இல்லாத நிலையில், இந்தியாவின் இறை யாண்மைக்கு ஜம்மு- காஷ்மீர் இணங்கி வந்திருந்த நிலையிலும் கூட, எஞ்சியிருக்கும் தன்னாட்சி அம்சங்க ளை குழிதோண்டிப் புதைக்க விரும்பும் ஒன்றிய அரசாங் கத்தின் நோக்கத்திற்கு இருந்த சிறிதளவான தடையும் இன்று அகற்றப்பட்டுவிட்டது. இது கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்தின் அனைத்து நியதிகளுக்கும் எதிரா னது. ஜம்மு- காஷ்மீர் எந்தவித தனித்த இறை யாண்மையும் கொண்டிருக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தனி அரசியலமைப்பு, எஞ்சிய சட்ட அதிகாரங்கள், மாநிலம் குறித்த பிரச்சனை களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமானால், அதற்கு தேவைப்படும் சட்டமன்றத்தின் சம்மதம்- இவைகளை ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கும் சட்டப் பிரிவு 370 ஒரு சமச்சீரற்ற கூட்டாட்சியை பிரதிநிதித் துவம் செய்கிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.
உண்மையில் மேற்கண்ட அதிகாரங்கள் மட்டும் அம்மாநிலத்திற்கு எவ்விதமான தனித்த இறை யாண்மையையும் அளிக்காது. ஆனால் அம்மாநி லத்திற்கு நிறைவேற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை கள் மற்றும் அரசியல் அமைப்பை உருவாக்கிய தலை வர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஆளும் கட்சியின் விருப்பப்படி காற்றில் பறக்கவிடப்பட்டுள் ளதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்பது புரிய வில்லை. காஷ்மீர் தலைவர்களுக்கும் ஒன்றிய அர சுக்கும் இடையேயான நிலைப்பாடு, உரையாடல், அது இந்தியாவுடன் இணைந்த சூழல் மற்றும் நிபந்தனை கள், முற்போக்குத்தன்மை நிறைந்த அரசியல் அமைப்பு வழிமுறைகள் ஆகியவற்றை வழங்கி, இணைப்பு உடன்பாடு மற்றும் அதன் செயல்முறை கள் மூலம் இந்தியாவுடனான காஷ்மீரின் ஒருங்கிணைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. பன்னெடுங்காலமாக இது நடை பெற்று வந்துள்ளது என்பது வசதியாக மறக்கப் பட்டுள்ளது.
நீதித்துறையின் தோல்வி
மேலும், ஜம்மு- காஷ்மீரை இரண்டு யூனியன் பிர தேசங்களாக மறுசீரமைக்க அரசியலமைப்புச்சட்டம் அனும திக்கிறதா என்பது குறித்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கத் தவறியுள்ளது. நீதித்துறையின் தோல்விக்கு இது ஒரு வியக்க வைக்கும் எடுத்துக்காட்டு. ஒரு மாநிலத்தை தரமிறக்க, அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவை முதன் முறையாக பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு தீர்ப்பளிக்க வேண்டாம் என நீதிமன்றம் முடிவு செய்தது அதிர்ச்சி அளிப்பதாகும்.
ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்து மீட்டெடுக் கப்படும் என அரசாங்க கூடுதல் தலைமை வழக்கறிஞர் (சொலி சிட்டர் ஜெனரல்) உறுதியளித்தார் என்பது தான் ஒரே காரணம். பரிகாரம் மேற்கொள்வதாகச் சொல்லப் படும் ஓர் உத்தரவாதம் எந்த ஒரு நடவடிக்கையையும் செல்லத்தக்கதாக, மாற்ற முடியுமா? அதே நேரத்தில், லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கியதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எந்த ஒரு மாநிலத்தின் சில பகுதிகளை பிரித்தெடுத்து புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கவும், அது குறித்து பரிசீலிக்கவும் இந்தத்தீர்ப்பு வழிவகுக்கிறது. அதேபோல மாநில அரசு மற்றும் அதன் சட்டமன்றத்தின் சார்பாக தாங்களே முடிவெடுக்கும் குடி யரசுத் தலைவரின் அதீத அதிகாரத்துக்கோ நாடாளுமன்றத் தின் தகுதிக்கோ எந்த வரம்பும் இல்லை என்ற நீதி மன்ற நிலைபாடு சமமான ஆபத்து நிறைந்தது. குறிப் பாக மாநிலச் சட்டப் பேரவைகளில் சட்டம் இயற்ற முடியாத அதிகாரங்கள் பற்றிய குறிப்பு, மாநிலங்க ளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்துகிறது. இத்தீர்ப்பின் பின்னணியில் ஒரு மாநிலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒருபோதும் செய்யாத அசாதாரண நடவடிக்கைகளைத் தனது சொந்த நாடாளுமன்ற பெரும்பான்மை மூலம் நிறைவேற்றும் வகையில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி யைதானே உருவாக்கும் அரசாங்கங்கள் அமலாக்கலாம்.
சில எடுத்துக்காட்டுகள்:
அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு ஒப்பு தல், மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தங்களை ரத்து செய்தல், முக்கிய வழக்குகளை திரும்பப் பெறுதல், பெரிய அளவில் கொள்கை மாற்றங்களைக் கொண்டு வருதல். குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் மாநில நலன்களை சேதப்படுத்தினால், பின் நாட்களில் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் மூலம் மீட்டெடுக்கப்படலாம் என்ற கருத்து மட்டும் சற்று ஆறுதல் அளிக்கிறது.
இந்தத் தீர்ப்பு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் மீதான இந்தியாவின் இறையாண்மையை சரியான முறையில் நிலைநிறுத்துவதாகத் தோன்றினாலும், அதிகார அமைப்புகளின் வரம்புகளை வலுவிழக்கச் செய்கிறது. அச்சமடையும் அளவிற்கு கூட்டாட்சியை மாண்பி ழக்கச் செய்கிறது. ஜனநாயக செயல்முறைகளைச் சிதைக்கிறது.
தி இந்து தலையங்கம் 12.12.23,
தமிழில் : கடலூர் சுகுமாரன்